இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் காலமானார்



- சுப்ரமணி.

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்தார். 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தமிழக அரசின் சிறந்த இயற்கை விவசாயி விருதினை பெற்றார். 52 வயதாகும் இவர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Comments