பேராசிரியர்களின் சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவு : அண்ணா பல்கலைக்கழகம்

- சுப்ரமணி.

பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களை அவர்களிடமே ஒப்படைக்க அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவு.

நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கல்விச்சான்றிதழ்களை சரிபார்த்த பின் பேராசிரியரிடமே திரும்பிக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து பொறியியல் கல்லூரி முதல்வருக்கும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். விதிமீறும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதற்கட்டமாக 17.12.2018 க்குள் அனைத்து பொறியியல் கல்லூரிகளும் இந்த உத்தரவுக்கு பதிலளிக்க வேண்டுமென்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Comments